படத்தைப் பார்த்தாலே கதை சொல்லும் காட்சிகளைக் கண்டிருக்கிறீர்களா?
அத்தகைய காட்சிகளை இங்கே பார்க்கலாம்! இந்த சோப் விளம்பர வாசகங்களைப் பாருங்களேன்!
கற்பனைத்திறமும் கவித்துவமான சொல்லாடலும் அட்டகாசமான புகைப்படங்களும் நம்மைப் பார்த்தமாத்திரத்தில் கவர்ந்துவிடுகின்றன.
அமுலின் விளம்பரங்கள் எப்போதும் அந்த ரகம்தான். அந்த வகையில் சென்னையில் மளிகைக்கடை ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த இந்த மெடிமிக்ஸ் விளம்பர வாசகம் எல்லோரையும் கவர்ந்துவிட்டிருந்தது.
ஐம்பது ஆண்டுகளாக வாசகர்களுடன் பயணிக்கிறார்களாம். அதுவும் அன்போடு. எப்படிப்பட்ட அன்போடு, வெண்ணிற நுரை ததும்பும் அன்போடு..சோப் தனது அன்பை அப்படித்தானே வெளிப்படுத்தும்… 50 ஆண்டுகாலம் என்பதையும் சோப் நுரை எழுத்துக்களால் உருவாக்கியிருக்கின்றது மெடிமிக்ஸ் .
நன்றாக இருக்கிறதல்லவா!