வாழ்த்துக்கள் ரவீஷ் குமார்!

வாழ்த்துக்கள் ரவீஷ் குமார்!

இந்தியப் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஒரு பெருமையை இன்று தேடித்தந்திருக்கிறார் ரவிஷ் குமார். என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் பிரைம் டைம் ஷோ என்ற நிகழ்ச்சியை வழங்கிவரும் பத்திரிகையாளரான ரவீஷூக்கு ரமோன் மகசசே விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்தத் தகவலை பிலிப்பைன்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ரமோன் மகசசே அறக்கட்டளை உறுதிப்படுத்தியிருக்கிறது.நோபல் பரிசுக்கு இணையான விருது இது. செப்டம்பர் 9 ஆம் நாள் மணிலாவில் நடைபெற இருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.

தனது நிகழ்ச்சியின்மூலம் குரலற்றவர்களின் குரலாக ரவீஷ் குமார் செயல்பட்டிருப்ப தாகவும், தொழில் நேர்த்தியும் இதழியல் விழுமியங்களும் தரமும் கொண்ட பணி அவருடையது என்று மகசசே அறக்கட்டளை புகழ்ந்துள்ளது. ’தான் சொல்ல நினைத்ததை அதிகாரத்துக்கு அஞ்சாமல் துணிச்சலாக சொல்வதன்மூலம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகிறார் அவர்’ என்கிறது அவ்வமைப்பின் அறிக்கை.

மொத்தம் 5 பேருக்கு இவ்வாண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. அவர்களுள் ரவீஷ் குமார்  ஒருவர்.

வாழ்த்துக்கள் ரவீஷ்!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *